சேலத்தில் துணிவு திரைப்படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கு கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரசிகர்களின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் அஜித் குமாரின் துணிவு திரைப்படம் இன்று வெளியானது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் துணிவு திரைப்படத்தின் முதல் காட்சி அதிகாலை திரையிடப்பட்டது. இதன் காரணமாக நேற்று நள்ளிரவு முதலே சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கம் முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும், அஜித் ரசிகர்கள் பலரும் காரின் மீது ஏறியும் தலை மேல் பட்டாசுகளை வெடித்தும் ரகளை செய்தனர். அதே சமயம் திரையரங்கு கதவு திறக்கப்படாததால், திரையரங்கின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். மேலும், இதில் அஜித் ரசிகர் ஒருவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அப்போது அந்த ரசிகர் மதுபோதையில் அல்டிமேட் ஸ்டார் அஜித் வாழ்க என முனங்கியபடி கதறினார். பிறகு அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டது. மேலும் அதில் ஏற மறுத்து விடாப்பிடியாக ஆடம் பிடித்தார். பிறகு அவரது நண்பர்களின் உதவியுடன் காவல்துறையினர் அவசர ஊர்தியில் ஏற்றி சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனை அழைத்து சென்றனர்.
அஜித் ரசிகர்களின் இந்த எல்லை மீறிய கொண்டாட்டங்களால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வாரிசு மற்றும் துணிவு படங்களை இணையத்தில் வெளியிட தடை