Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வாரிசு மற்றும் துணிவு படங்களை இணையத்தில் வெளியிட தடை

    வாரிசு மற்றும் துணிவு படங்களை இணையத்தில் வெளியிட தடை

    ‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ திரைப்படங்களை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிடத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

    தமிழ் திரையுலகின் இரு முக்கிய ஆளுமைகளாக நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் திகழ்ந்து வருகின்றனர். இருவருக்கும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய்யின் வாரிசு திரைப்படமும், அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் இன்று வெளியாகின. ரசிகர்கள் இரு திரைப்படங்களையும் பார்த்து வருகின்றனர். 

    இதனிடையே, நேற்று வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் இணையதளத்தில் வெளியாக அதிகளவில் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. இதனால், இரு படக்குழுக்களின் சார்பில், நீதிமன்றத்தில் சட்டவிரோதமாக திரைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. 

    மேலும்,  ‘வாரிசு’ படத்தை சட்ட விரோதமாக வெளியிட 4,548 இணையதள பக்கங்களுக்கும், ‘துணிவு’ படத்தை சட்டவிரோதமாக வெளியிட 2,754 இணையதள பக்கங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று இரு படக்குழுக்களின் சார்பாகவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, ‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ திரைப்படங்களை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிடத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

    வாரிசு திரைப்படத்தை பார்த்த லோகேஷ் கனகராஜ்; என்ன சொல்கிறார்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....