பறக்கும்போது கரும்புகை வந்ததால் அவசர அவசரமாக கோவையில் கோ ஏர்-43 விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்திற்கு தினந்தோறும் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று காலை கோ ஏர்-43 என்ற விமானம் ஒன்று பெங்களூருவில் இருந்து 92 பயணிகளுடன் மாலி நாடு நோக்கி சென்று கொண்டிருந்தது.
பறந்து கொண்டிருந்த சமயத்தில் கோ ஏர்-43 விமானத்தில் இருந்து திடீரென கரும்புகை எழுந்தது. இதனால் விமானத்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அச்சமயத்தில், விமானம் கோவை சுற்றுவட்டாரப்பகுதிக்குள் பறந்து கொண்டிருந்ததால் உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு கரும்புகை எழுவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கோ ஏர்-43 விமானம் கோவை விமான நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் – 12) மதியம் 12.57 மணியளவில் அவசரமாக தரையிரக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் நேரவில்லை. மேலும், விமானத்தில் இருந்து கரும்புகை கிளம்பியது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
எண்ணெய் கிடங்கில் மின்னல் தாக்குதல்; இன்னலில் கியூபா