Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு3 நாள்கள் தொடர் விடுமுறை; பயணிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    3 நாள்கள் தொடர் விடுமுறை; பயணிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. 

    இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நாளையும் அதற்கு மறுநாளும் வார விடுமுறை நாள்கள் என்பதால், அடுத்த 3 நாள்கள் தொடர் விடுமுறை நாள்களாக உள்ளது. 

    இதனை முன்னிட்டு, தலைநகர் சென்னையிலிருந்து பொதுமக்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். 

    இவ்வாறு, சென்னையிலிருந்து பொதுமக்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    இதன்படி, சென்னை கோயம்பேடு நிலையத்தில் இருந்து 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களுக்காக போதுமான பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 

    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை முதல் கலைக்கட்டப்போகும் கிராமிய நிகழ்ச்சிகள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....