நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர், வீடியோ எடுத்து வைத்துவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது மாணவர் தனுஷ். இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
தற்கொலைக்கு முன், தனுஷ் கைப்பேசியில் வீடியோ ஒன்றை பதிவுசெய்து வைத்துள்ளார். அதில் அவர், என்னால் படிக்க முடியும் ஜெயிக்க முடியும் என நினைத்தேன். ஆனால், என்னால் படிக்க முடியவில்லை. என் சாவுக்கு யாரும் காரணமில்லை. முழுக்க முழுக்க நான் தான் காரணம் என பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் தற்கொலையும் செய்துக்கொண்டுள்ளார்.
அதன் பிறகு, சம்பவ இடத்துக்கு விரைந்த சூளைமேடு காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனுஷ் நீட் தேர்வுக்கு தாயாராகிக் கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில், 12-ம் வகுப்பில் 600-க்கு 483 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் நிலைமை மோசம்: பஞ்சத்தில் மக்கள்