வானகரம் ஸ்ரீபுரம் மண்டபத்திற்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதலில் வந்துள்ள நிலையில் தற்போது இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் மண்டபத்திற்கு வந்த பொழுது அவரை வெளியேறச் சொல்லி தொண்டர்கள் முழக்கமிட்டனர். மேலும் அவரது ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகரன் ஆகியோரையும் துரோகி எனக்கோரி தொண்டர்கள் முழக்கமிட்டனர்.
இதனால் மேடையிலிருந்து வைத்தியலிங்கமும், ஜேசிடி பிரபாகரனும் மேடையிலிருந்து இறங்கியுள்ளனர். தொடர்ந்து எழுந்த எதிர்ப்பு முழக்கங்களை கட்டுப்படுத்த முன்னாள் அமைச்சர் வளர்மதி போன்றோர் முயன்று வருகின்றனர்.
23 தீர்மானங்கள் தவிர வேறு எதையும் பேசக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், ஒற்றைத்தலைமை பற்றி மட்டுமே கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கூட்டம் நடக்கும் இடத்திற்கு எடப்பாடி பழனிச்சாமியின் வாகனம் தொண்டர்களின் ஆரவார முழக்கத்திற்கு இடையில் மெதுவாய் ஊர்ந்து வந்தது.
இன்னும் சற்று நேரத்தில் துவங்கப்போகும் அதிமுக பொதுக்குழு.. வாகன நெரிசலில் சென்னை சாலைகள்..!!