தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்புடன் தற்போது எடப்பாடி பழனிச்சாமி மேடைக்குச் சென்றுள்ளார். மேடையிலிருந்து தனது தொண்டர்களுக்கு கைகாட்டி எடப்பாடி பழனிச்சாமி, மேடையிலிருந்தவர்களுக்கு கைகொடுத்து வாழ்த்துகள் தெரிவித்து அமர்ந்துள்ளார்.
பழனிசாமிக்குப் பிறகு மேடையேறிய ஓ.பன்னீர்செல்வமும் தற்போது மேடையேறியுள்ளார். இருவருக்கும் இடையில் தமிழ்மகன் உசேன் அமர்ந்துள்ளார். இதற்கிடையில் மேடையில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர்கள் ஜெ.ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் புகைப்படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார் எடப்பாடி பழனிசாமி.
கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையில் நடைபெறும் பொதுக்குழுவில் முதலில் பேசுவதற்கு தமிழ்மகன் உசேன் அழைக்கப்பட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு: நேரடி செய்திகள்..ஊர்ந்து வந்த இபிஎஸ் வாகனம்!