Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சொத்துக்களை வாங்கி குவிக்கும் நயன்தாரா! ஹைதராபாத்தில் புதிதாக 2 பங்களா வங்கியுள்ளதாக தகவல்!

    சொத்துக்களை வாங்கி குவிக்கும் நயன்தாரா! ஹைதராபாத்தில் புதிதாக 2 பங்களா வங்கியுள்ளதாக தகவல்!

    ஐதராபாத்தில் இரண்டு சொகுசு பங்களாக்களை நயன்தாரா வாங்கியுள்ளார். 

    விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் முறையே இயக்கத்திலும் நடிப்பிலும் உச்சத்தை அடைந்து வருகின்றனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சமீபத்தில் வந்த அறிவிப்பு ஒன்று விக்னேஷ் சிவனை உச்ச இயக்குனர் என்று அழைப்பதில் தவறில்லை என்றே தோன்ற வைத்துள்ளது. 

    ஆம்! நடிகர் அஜித்குமாரின் 62-வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன்தான் இயக்குகிறார் என்ற அறிவிப்புதான், விக்னேஷ் சிவனை உச்ச இயக்குனர் என்று அழைப்பதில் தவறில்லை என்ற எண்ணத்தை விதைத்துள்ளது. ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்திலும், ‘வலிமை’ திரைப்படத்திலும் பாடலாசிரியராக பணியாற்றிய விக்னேஷ் சிவன், அஜித்குமாரின் 62-வது திரைப்படத்தில் இயக்குனராக பணியாற்ற இருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பது அனைவரும் அறிந்ததே. விக்னேஷ் சிவனின் முன்னேற்றப் பாதை இப்படியாக இருக்கிறது. 

    இதையும் படிங்க: டபுள் தமாக்கா கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்…’துணிவு’ தந்த சந்தோஷம்!

    லேடி சூப்பர் ஸ்டார் என்ற தகுதியான அடைமொழியுடன் வலம் வந்துக்கொண்டிருக்கும் நயன்தாராவிற்கு இருக்கும் ரசிக பட்டாளம் குறித்து எவரும் எவருக்கும் விளக்கத் தேவையில்லை என்ற ரீதியில்தான் நயன்தாராவின் மீதான ரசிகர்களின் அன்பு இருக்கிறது. திரைப்படத்திற்கு  திரைப்படம் நயன்தாராவின் வளர்ச்சியும் முன்னேற்றம் அடைந்துக் கொண்டிருக்கிறது. 

    மேலும், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருமணம் செய்தனர். இப்போது இருவரும் தங்களின் திரைப்படங்களில் பிஸியாக உள்ளனர். 

    இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இரண்டு சொகுசு பங்களாக்களை நயன்தாரா வாங்கியிருப்பதாக தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது. ஒவ்வொரு வீட்டின் விலையும் தலா ரூ.15 கோடி வரை இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....