வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் ‘அன்பை’ மையமாக கொண்டு சொன்ன குட்டிக்கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. பொங்கலுக்கு வாரிசு திரைக்கு வருமென்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாரிசு திரைப்படத்தின் புரோமஷன் பணிகள் தொடங்கியுள்ளது.
மேலும், வாரிசு திரைப்படத்தில் இருந்து சமீபத்தில் வெளிவந்த ‘ரஞ்சிதமே’, தீ தளபதி மற்றும் சூல் ஆஃப் தி வாரிசு போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாக்களில் விஜய் பேசும் குட்டிக்கதைக்கு என்று பல ரசிகர்கள் உள்ளனர்.
இந்த முறை என்ன குட்டிக்கதை விஜய் கூறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது. இந்நிலையில், இந்த முறை அன்பை அடிப்படையாகக் கொண்டு நடிகர் விஜய் ஒரு குட்டிக் கதை கூறியுள்ளார்.
விஜய் சொன்ன குட்டிக்கதை:
ஒரு குடும்பம். அதில் அம்மா, அப்பா, அண்ணா, தங்கச்சி. அப்பா தினமும் வேலைக்கு போய்ட்டு வரும்போது சாக்லெட் வாங்கிட்டு வருவார். ரெண்டு பசங்களுக்கும் தருவார். இதில் தங்கச்சி சாக்லெட்டை அப்போதே தின்றுவிடும்.
அண்ணன் அடுத்த நாளைக்கு பள்ளிக்கு செல்லும் போது சாப்பிடலாம் என ஒரு இடத்தில் மறைத்து வைப்பார். அண்ணன் போனதும் தங்கச்சி மறைத்து வைத்திருந்த சாக்லெட்டை எடுத்து தின்றுவிடும்.
இப்படி தினமும் நடக்கும். ஒருநாள் தங்கச்சி பாப்பா அண்ணனிடம், “அன்பு அன்புனு சொல்றாங்களே அன்புனா என்ன அண்ணா ?” என கேட்கும்.
அப்போது அந்த அண்ணா, “நீ உன்னோட சாக்லெட்டையும் சாப்டுட்ற, எனக்கு வெச்ச சாக்லெட்டையும் சாப்டுட்ற. அது தெரிஞ்சும் தினமும் அங்கயே சாக்லெட் வைக்குறேன்ல அதுதான்மா அன்பு” என சொல்வார். இந்த அன்புதான் உலகத்தை வெல்லும் ஆயுதம்.
இவ்வாறு விஜய் கூறினார்.
இந்திய இளைஞருக்கு லாட்டரியில் அடித்த ஜாக்பாட்; இவ்வளவு பெரிய தொகையா?