Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சிவகார்த்திகேயன் எழுத, தளபதி விஜய் பாட.. இதுதான் பீஸ்ட் அப்டேட்!

    சிவகார்த்திகேயன் எழுத, தளபதி விஜய் பாட.. இதுதான் பீஸ்ட் அப்டேட்!

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கும் திரைப்படம்தான் பீஸ்ட்! 

    இதுவரை பீஸ்ட் படத்தில் இருந்து விஜய் அவர்களின் போஸ்டர்களும், புகைப்படங்களும் மட்டுமே வெளியான நிலையில், இன்று மாலை ஆறு மணிக்கு மற்றுமொரு அப்டேட்டை வெளியிட உள்ளதாக பீஸ்ட் படக்குழு அறிவித்துள்ளது.

    இன்று மாலை வெளியாக இருக்கும் பீஸ்ட் படத்தின் அப்டேட் என்னவாக இருக்கும் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எண்ண அலைகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    சமூக வலைத்தளங்களில் தற்போது பீஸ்ட் பற்றியான உரையாடல்கள்தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. தளபதி விஜய் அவர்களின் இரசிகர்கள் பல்வேறு கருத்து கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, பீஸ்ட் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்தான அப்டேட்டுதான் இன்று வெளிவரும் என்றும், பீஸ்ட் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்தான அப்டேட்டுதான் இன்று வெளிவரும் என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    beast

    பாடல் குறித்தான அப்டேட் என்றால், சிவகார்த்திகேயன் அவர்கள் பாடல் வரிகள் எழுத, தளபதி விஜய் அவர்கள் பாடியிருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வம் அற்ற தகவல்கள் வந்திருக்கின்றன. அனிரூத் இப்படத்தின் இசையமைப்பாளர் என்பதாலும், சிவகார்த்திகேயன் ஏற்கனவே நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்திருப்பதாலும் இத்தகவல் உண்மையாக இருக்க அனேக வாய்ப்புகள் உள்ளன.

    doctor movie promo

    நெல்சன் திலீப்குமார் அவர்களின் பாடல் ப்ரோமோக்களுக்கு என்றே பிரத்யேக இரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் விஜய் அவர்கள் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாக, தற்போது தளபதி விஜய், பீஸ்ட் போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க;நடிகர் விஜய் எடுத்த புகைப்படம் வைரல்; காரணம் இதுதான்! – தினவாசல் (dinavaasal.com)

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....