பொன்னியின் செல்வன் வசூல் குறித்து பார்த்திபன் பதிவிட்டுள்ள ட்விட்டிற்கு ரசிகர்கள் எதிர்கேள்வி கேட்டு வருகின்றனர்.
பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான், பொன்னியின் செல்வன்.
இரு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.
தொடக்கத்தில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதைமாந்தர்களை அவ்வப்போது போஸ்டராக இணையதளத்தில் படக்குழு வெளியிட்டு வந்தது. அதையடுத்து, வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றன.
இதையும் படிங்க:அதிகளவில் வெளிவந்த நியாய விலைக்கடை விற்பனையாளர் பணிக்கான அறிவிப்பு…
இதைத்தொடர்ந்து, பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளிவந்தது. பல திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் காட்சிகளுக்கு முன்பாக செண்டை மேளங்களுடனும், ரசிகர்களின் ஆடல்பாடலும் இடம்பெற்றிருந்தது. மேலும், திரைப்படம் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும், பொன்னியின் செல்வன் உலகளவில் முதல் நாளில் மட்டும் 80 கோடி வசூல் புரிந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் உலகம் முழுவதும் 400 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ள பார்த்திபன் பதிவிட்டுள்ள ட்விட் சர்ச்சயை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவில், ‘Crosses-400 Crores!!!! இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மதம்மாறி விட்டது! இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சனையை எழு (இ)ப்ப லாம்! எழு ப்பினால் … இன்னும் ஒரு 100!’ இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவைக் கண்ட ரசிகர்கள் இந்து மத சர்ச்சையால்தான் பொன்னியின் செல்வன் 400 கோடி வசூல் செய்துள்ளது என பாரத்திபன் தெரிவிக்கிறாரா என்றும், இன்னும் இந்து மத சர்ச்சை தொடர்ந்தால் அதிக வசூல் வந்துவிடும் என்று தெரிவிக்கிறாரா எனவும், சர்ச்சையை கிளப்பும் வகையிலான இந்த ட்விட் அவசியம்தானா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.