அரசுப் பேருந்துகள் பராமரிப்பில் அரசு அலட்சியப் போக்குடன் செயல்படுகிறதென தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து புறப்பட்ட அரசுப் பேருந்தில் இருக்கை கழன்றதில், அதில் அமர்ந்திருந்த பயணி வெளியே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்திருப்பதாவது,
இதையும் படிங்க: வெற்றிபெற்ற “டார்ட் திட்டம் “: உறுதிப்படுத்திய விஞ்ஞானிகள் ,நடந்தேறிய அறிவியல் அதிசயம் …
அரசுப் பேருந்துகள் பராமரிப்பு விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியமாக செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. மழைக் காலத்தில் பேருந்துக்குள் ஒழுகுவதால் பயணிகள் நனைந்து கொண்டே பயணிப்பது, பேருந்து பழுதானால் பாதி வழியில் இறக்கி விடுவது போன்ற நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், போக்குவரத்து கழகத்துக்குப் புதிதாக 1771 பேருந்துகள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்படும் பழுதடைந்த பேருந்துகளை உடனடியாக திரும்பப் பெற்று, புதிதாக வாங்க உள்ள அரசுப் பேருந்துகளை முன்னுரிமை அடிப்படையில் அந்த மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.