Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகேரளாவில் திருநம்பிக்கு குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியில் தம்பதியினர்!

    கேரளாவில் திருநம்பிக்கு குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியில் தம்பதியினர்!

    கேரளாவில் திருநம்பி ஸஹத் கர்ப்பம் தரித்திருந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. 

    கேரளாவைச் சேரந்த ஸியா ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர். ஸஹத் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர். இவர்கள் இருவரும் காதலால் இணைந்து கடந்த மூன்று ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். 

    சமீபத்தில், ஸியா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு திருநம்பி தாயாகியிருப்பதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து, ஸியாவின் பதிவு வைரல் ஆனது. 

    இந்நிலையில், கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இன்று காலை சுமார் 9.30 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஸியா- ஸஹத் தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது. 

    இதுகுறித்து, ஸியா கூறுகையில், ‘ஸஹாத்தும், குழந்தையும் நலமாக உள்ளனர். எங்கள் குழந்தை மகனா, மகளா என்பதை நாங்கள் இப்போது பொதுவெளியில் கூற விரும்பவில்லை.’ என தெரிவித்துள்ளார். 

    ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் சிகிச்சையின்போது, ஸஹத் மகப்பேறு அடைந்தார். இதனால், அந்த சிகிச்சை தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. ஸஹத்துக்கு பிறப்பிலேயே கருப்பை இருந்ததால் இது நடந்தது என்கிறார்கள் மருத்துவர்கள்.

    காதல் மாதம்; இவையெல்லாம் அவசியமா? – இன்றைய ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....