புதுச்சேரியில் நடிகர் சந்தானம் நடித்து வெளியாகியுள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தையொட்டி படம் வெற்றி பெற கோரி புதுச்சேரி ஆழ்கடலில் விளம்பர பேனர் வைத்து ரசிகர்கள் வரவேற்பளித்தனர்.
புதுச்சேரியில் அரசியல் தலைவர்கள், நடிகர்களின் பிறந்தநாள் மற்றும் புதிய திரைப்படம் வெளியாகும் போது ரசிகர்கள் கடலுக்கு அடியில் விளம்பரங்கள் வைக்கும் புதிய கலாச்சாரம் புதுச்சேரியில் அரங்கேறி வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே முதலமைச்சர் ரங்கசாமிக்கும், நடிகர்கள் அஜித், விஜய், விக்ரம், யாஷ் ஆகியோருக்கு கடலுக்கடியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பேனர்களை ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் உதவியுடன் ரசிகர்கள் வைத்தனர்.
அடுத்ததாக தற்போது நடிகர் சந்தானம் ரசிகர் மன்றத்தினர் இன்று வெளியாகியுள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தைவித்தியாசமாக வரவேற்கும் வகையில் ரசிகர் மன்ற பேனரை ஆழ்கடலில் பிடித்து மகிழ்ந்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.