‘உலகளாவிய அன்பைசெழிக்க செய்ய நாமும் காதலர் தினம் கொண்டாடுவோம்’ என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
காதலர் தினம் வருவதற்கு 7 நாட்களுக்கு முன்பில் இருந்தே காதலர் தினத்துக்கான கொண்டாட்டம் தொடங்கி விடுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அன்பின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. இன்று பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர்கள் அனைவரும் அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், உலகளாவிய அன்பைசெழிக்க செய்ய நாமும் காதலர் தினம் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல். காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம் என்பான் பாரதி. உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம்’ என பதிவிட்டுள்ளார்.
பூச்செண்டாய் மனித மனங்கள் நிறைய காதல் அவசியம்தானே?! – காதலர் தின ஸ்பெஷல்!