தனது தோழியை அடி வாங்கவிடாமல் செல்லப்பிராணி ஒன்று போராடி காக்கும் காணொளி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
செல்லப்பிராணிகள் மனிதர்களுடன் ஒட்டி உறவாடி பிரிக்க முடியாத ஜீவனாக மாறிவிடுகின்றன. செல்லப்பிராணிகள் செலுத்தும் அன்புகூட இப்போது மனிதர்களிடம் கிடைப்பதில்லை என்று கூட கூறும் அளவிற்கு பலரும் தங்களின் செல்லப்பிராணிகளை பற்றி பெருமையாக பேசுவதை நாம் கேட்டிருப்போம்.
அப்படியான ஒரு நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. செல்லப்பிராணியாக நாய் ஒன்று சிறுமியான தனது குட்டி தோழியிடம் கொண்டுள்ள அன்பை காட்டுகிறது.
இது தொடர்பான அந்தக் காணொளியில், சிறுமி வளர்க்கும் செல்ல நாய் ஒரு ஓரமாக நிற்கிறது. சிறுமி தரையில் அமர்ந்து இருக்கிறார். அவரின் தாய் முதலில் சிறுமியை கையை ஓங்கி கண்டிக்கிறார். பிறகு ஓரமாக நின்றுக்கொண்டிருந்த நாய் வேகமாக ஓடி வந்து தனது தோழியை காப்பாற்ற சிறுமியை சுற்றி சுற்றி வருகிறது. மேலும் தொடர்ந்து தாய் அடிக்க முற்பட, நாயும் தனது தோழியை காப்பாற்றி அன்பை வெளிப்படுத்துகிறது. இந்தக் காணொளிக்கு விருப்பங்களும் கருத்துகளும் குவிந்து வருகின்றன.
View this post on Instagram
மக்களால் சூறையாடப்பட்ட பார்; வெளியான சிசிடிவி வீடியோ!