கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் கடல் போல் அலை மோதுகிறது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் வளாகத்தில் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகா தீபத்திற்கு தேவையான 4,500 லிட்டர் நெய், 1050 மீட்டர் காடா துணியும் மலைக்கு எடுத்து செல்லப்பட்டது. மேலும் தீப கொப்பரையும் பூஜை செய்யப்பட்டு எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை 6 மனைக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் இருக்கும் மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்பட உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக தீபத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், தற்போது இந்த ஆண்டு அனுமதை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் மகா தீபத்தை காண நேரில் செல்கின்றனர். சிறப்பு பேருந்துகளும் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுவதால் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது.
மேலும் கிரிவல பாதையில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அண்ணாமலையார் கோயிலை சுற்றி எந்த பக்கம் திரும்பினாலும் மக்கள் அலை மோதுகின்றன. இந்நிலையில் இதுவரை சுமார் 8 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்திருப்பதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 12 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
#tiruvannamalaideepam #Tiruvannamalai #GiriValam #KarthigaiDeepam pic.twitter.com/y9ksW4j0Qe
— RAJKUMAR (@arkumar007) December 6, 2022
‘முதல்வராக’ ஸ்டாலினின் ‘முதல்’ ரயில் பயணம்; பொதிகை ரயிலில் தென்காசிக்கு செல்வது எதற்காக தெரியுமா?