Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பாஜக உடனான உறவை இதோடு முடித்துக் கொள்கிறேன்; திருச்சி சூர்யா சிவா

    பாஜக உடனான உறவை இதோடு முடித்துக் கொள்கிறேன்; திருச்சி சூர்யா சிவா

    பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட திருச்சி சூர்யா சிவா, பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

    பாஜக பெண் நிர்வாகிகளிடம் தொலைபேசியில் ஆபாசமாக திட்டிய திருச்சி சூர்யா சிவாவின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்கு பாஜக தலைமை தக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக திருச்சி சூர்யா சிவாவை பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா அறிவித்துள்ளார். மாநில அமைப்பு செயலாளர் கேச விநாயக்தை மாற்றினால் மட்டுமே பாஜக வளரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

    இது தொடர்பாக திருச்சி சூர்யா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

    அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி, இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும்.

    அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேச விநாயகம் அவர்கள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன். உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி என அண்ணாமலையை குறிப்பிட்டு அவர் பதிவிட்டுள்ளார்.

    மாநில அளவிலான ஓவிய-சிற்பக் கலைக்காட்சி; கலைஞர்களிடமிருந்து ஓவியங்கள், புகைப்படங்கள் வரவேற்பு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....