நடப்பாண்டிற்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் ஜப்பான் மற்றும் ஸ்பெயின் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின.
கத்தாரில் நடப்பாண்டிற்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், நேற்று 4 ஆட்டங்கள் நடைபெற்றது. இவற்றுள் குரூப்- இ பிரிவில் ஜெர்மனி-கோஸ்டா ரிகா அணிகளும், ஜப்பான்-ஸ்பெயின் அணிகளும் மோதின.
ஜெர்மனி மற்றும் கோஸ்டா ரிக்கா மோதிய போட்டியில் ஜெர்மனி ஆரம்பம் முதலே தனது ஆதிக்கத்தை தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 10-ஆவது நிமிடத்தில், ஜெர்மனி கோல் அடித்து, 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதைத்தொடர்ந்து, 58 ஆவது நிமிடத்திலும், 70-ஆவது நிமிடத்திலும் கோஸ்டா ரிக்கா கோல் அடிக்க, ஜெர்மனி ஸ்தம்பித்தது. 2-0 என்ற கணக்கில் கோஸ்டா ரிக்கா முன்னிலை வகிக்கத் தொடங்கிய மூன்றாவது நிமிடத்தில் ஜெர்மனி மீண்டும் கோல் அடித்து 2-2 என்று சமனில் இருந்தது.
பின்னர், 85 மற்றும் 89 ஆவது நிமிடங்களில் ஜெர்மனி கோல் அடித்து 4-2 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிக்காவை வீழ்த்தியது.
ஜப்பான் மற்றும் ஸ்பெயின் அணியினர் மோதிய ஆட்டத்தில், ஆட்டம் தொடங்கிய 11-ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணி கோல் அடித்து அசத்தியது. இதைத்தொடர்ந்து நெடுநேரமாக இரு அணிகளும் அடுத்த கோல்களை அடிக்க முயற்சித்தது.
இந்நிலையில், ஆட்டத்தின் 48-ஆவது நிமிடத்தில் ஜப்பான் அணி கோல் அடித்து 1-1 என்று சமநிலை வகிக்க, 51-ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலை அடித்து 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை ஜப்பான் வீழ்த்தியது.
இதன் மூலம், குரூப் இ பிரிவில் ஜப்பான் அணி 6 புள்ளிகளுடனும், ஸ்பெயின் அணி 4 புள்ளிகளுடனும் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன. ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் இரு அணிகளும் தலா 4 புள்ளிகளை பெற்றிருந்தாலும், கோல் வேறுபாடு அடிப்படையில் ஸ்பெயின் தகுதிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பனி வந்துடுச்சு மழை வராது புராணத்த தூக்கி போடுங்க..! தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் மழைச் செய்தி என்ன?