புது தில்லி பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகமாக இருப்பதால் அதற்க்கு நாங்கள் பொறுப்பேற்று கொள்கிறோம் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் புது தில்லி முதல்வருமான
அரவிந் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதிய தில்லி ,பஞ்சாப் ,ஹரியானா ஆகிய மாநிலங்களில் வேளான் உற்பத்தி மற்றும் அறுவடை முடிந்ததை அடுத்து அதன் கழிவுகளை அவ்விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவது வழக்கம்.
தற்போது புது தில்லி ,பஞ்சாப்,ஹரியானா ஆகிய மாநிலங்களில் வழக்கம்போல் வேளாண் உற்பத்தி முடிந்ததை அடுத்து அதன் கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்தியதால் முன்பு இருந்ததை விட வழக்கத்திற்கு மாறாக அங்கே 38 சதவிகிதம் காற்று மாசுபாடு மிகவும் அதிகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது..
இதையடுத்து இருமாநிலங்களில் ஆம் ஆத்மீ ஆளும் கட்சியாக செயல்பட்டு கொண்டு இருக்கும் நிலையில், இந்தமுறை காற்று மாசுபாடு குறைவாக இருக்கும் என மக்கள் எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக காற்று மாசு பாடு அதிகரித்துள்ளதால் மக்கள் கவலைக்குள்ளாகினர்.
இதையும் படிங்க: சந்திர கிரகணம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில்., திருப்பதி கோவில் மூடல்..! கோவில் நிர்வாகம் அறிவிப்பு
இதற்கிடையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் ,ஒருங்கிணைப்பாளரும் ,புது டில்லியும் முதல்வருமான கெஜ் ரிவாலும், பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான் இருவரும் செய்தியாளரை சந்த்தித்தனர்.
இதையடுத்து ,ஆம் ஆத்மீ கட்சியின் தலைவருமான கெஜ் ரிவால் அவர்கள் கூறியதாவது அகில இந்திய அளவில் காற்று மாசுபாடு என்பது மிக பெரிய பிரச்சனையாக கருதப்படுகிறது எனவே வட இந்தியாவில் இதை விட மிக கடுமையான காற்று மாசு பாட்டை எதிர்கொண்டிருக்கிறது தொடர்ந்து இரண்டாவது நாளாக தில்லியில் காற்றின் தரம் மோசமாக உள்ளது.
அதனால் ,பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் கழிவுகளை அளிப்பதால் காற்று மாசு அதிகரித்து வருவதற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம் ,அனால் பஞ்சாபில் நாங்கள் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களே ஆகின்றனர்,அதை கட்டுப்படுத்த்குவதற்கு நாங்கள் நடவடிக்கையம் எடுத்துள்ளோம் எனவும்.
அடுத்த ஆண்டுக்குள் வேளாண் கழிவுகளை எரிப்பது குறையும் ,மத்திய அரசு ஒரு கூட்டு செயல் திட்டத்தை கொண்டு வர வேண்டும் எனவும் ,மற்றவர்கள் மீது குறை சொல்லும் நேரமும் அல்ல ,மோசமான காற்றின் தரத்திற்கு கெஜ் ரிவால் அரசும், முழுவதுமான பொறுப்பும் அல்ல என்று அவர் கூறினார்.