‘நான் விளையாட்டுத்தனமாக சும்மா பேசியதை பெரிதாக்குகிறார்கள்’ என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஒரு கூட்டத்தில் மக்களை பார்த்து, ‘உங்களுக்கு ரேஷன் கார்டுக்கு 4,000 ரூபாய் கொடுத்தாரு; வாங்குனீங்களா இல்லையா.. வாய திறங்க; இப்போ பஸ்ல எப்படி போறீங்க, எல்லாரும் ‘ஓசி’ பஸ்ல போறீங்க’ என்று பேசிய காணொளி சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அமைச்சர் பொன்முடி பெண்களை ஓசி பஸ் என்று கூறியதற்கு, எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருத்தனர்.
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 30) அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலதித்தார்.
அப்போது பதிலளித்த அவர், ‛நான் விளையாட்டுத்தனமாக சும்மா பேசியதை பெரிதாக்குகிறார்கள். வேறு எந்த எண்ணத்திலும் பேசவில்லை. அதை பெரிதுபடுத்த தேவையில்லை’ என மழுப்பலாக தெரிவித்தார்.
இவரின், இந்தப் பேச்சு மேலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.
இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடி பெண் வயிற்றில் ‘ஓசி’யில் பிறந்தவர்தான் – நடிகை கஸ்துாரி காட்டம்