டெல்லியில் 12 வயது சிறுவனை 4 நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லிக்கு அருகே உள்ள சீலம்பூர் பகுதியைச் சேர்ந்தவன் 12 வயது சிறுவனை 4 நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுவனின் தாயார் டெல்லி மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், எனது மகனை செப்டம்பர் 18-ம் தேதி நான்கு நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்தரங்கப் பகுதிகளில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. விசாரணையில் அந்தச் சிறுவனின் நண்பர்கள் 3 பேர் இந்த செயலில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். மேலும், அந்த 3 பேருக்கும் வயது 10 முதல் 12 தான் இருக்கும். இந்நிலையில், ‘இதுவரை 2 சிறுவர்களை கைது செய்துள்ளோம்’ என்று காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால் கூறுகையில், “ இதுவொரு கொடூரமான சம்பவம். பாதிக்கப்பட்ட சிறுவன் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆதரவாக இருக்கிறோம். இந்தச் செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
இந்நிலையில், தற்போது பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : சர்ச்சையான தீப்தி ஷர்மாவின் ‘மன்கட்’ ரன் அவுட்! எம்சிசி அளித்த விளக்கம் என்ன?