முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தனது கணக்கின் முகப்பு படமாக தேசியக் கொடியை மாற்றியுள்ளார்.
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
நாடு முழுவதும் அனைவரது வீடுகளிலும் ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தேசியக் கொடியை பறக்க விடும்படி, பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். மேலும், சமூக ஊடகங்களிலும் தேசியக் கொடியை முகப்பு படமாக வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, பலரும் தங்களின் சமூக வலைத்தளங்களில் தங்களின் முகப்பு படத்தை மாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகப்பு படமாக தேசிய கொடியை மாற்றியுள்ளார்.