Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு‘தண்டோரா’ முறைக்கு தடை.. அரசாணை வெளியீடு

    ‘தண்டோரா’ முறைக்கு தடை.. அரசாணை வெளியீடு

    முக்கிய செய்திகளை பொதுமக்களிடம் சேர்க்கும் வகையில் ‘தண்டோரா’ முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்கான மாற்று ஏற்பாடுகளுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  

    தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதவாது:

    1. சட்டம்‌ மற்றும்‌ ஒழுங்கு, இயற்கை இடர்பாடுகள்‌ மற்றும்‌ பிற அரசின்‌ முக்கிய செய்திகளை பொது மக்களிடம்‌ விரைவாக கொண்டு சேர்க்கும்‌ பொருட்டு, விளம்பரம்‌ செய்யும்‌ விதமாக ‘தண்டோரா’ போடும்‌ முறை காலம்‌ காலமாக நடைமுறையில்‌ இருந்த பழக்கம்‌. அது இன்று வரை நடைமுறைப்‌ படுத்தப்படுகிறது.
    2. அறிவியல்‌ தொழில்‌ நுட்பம்‌ வளர்ந்து விட்ட இக்காலத்தில்‌, தமுக்கடிப்பினால்‌ தண்டோரா போட்டு அரசின்‌ முக்கிய செய்திகளை விளம்பரம்‌ செய்தல்‌ தொடர்பாக சமூக ஆர்வலர்கள்‌ சுட்டிக்காட்டி மாற்று ஏற்பாடுகளை செய்யும்‌ வண்ணம்‌ அரசின்‌ கவனத்தை ஈர்த்துள்ளனர்‌.
    3. தமுக்கடிப்பினால்‌ தண்டோரா போட்டு அரசின்‌ முக்கிய செய்திகளை விளம்பரம்‌ செய்வதை அரசு கூர்ந்தாய்வு செய்து, தமுக்கடிப்பினால்‌ ‘தண்டோரா’ போடும்‌ நடைமுறை எந்தெந்த துறைகளில்‌ நடைமுறையில்‌ உள்ளதோ, அதற்கு முழுமையாக தடை விதித்து உத்தரவிடப்படுகிறது. இது தொடர்பான அரசின்‌ ஆணைகள்‌ மற்றும்‌ வழிகாட்டுதல்கள்‌ அனைத்தையும்‌ மாற்றியமைக்க உத்தரவிடப்படுகிறது. மாற்று ஏற்பாடாக, அரசின்‌ முக்கிய செய்திகளை மிக விரைவாக மக்களிடம்‌ சேர்க்கும்‌ விதத்தில்‌, பொருத்தமான வாகனங்களில்‌ (தானிழுவை வாகனம்‌ (Auto Rickshaw), மிதிவண்டி (Bicycle)) ஒலி பெருக்கிகளை பொருத்தி, தமிழ்நாட்டின்‌ கிராமப்‌ புறங்களின்‌ மூலை முடுக்குகளிலெல்லாம்‌ விளம்பரம்‌ செய்வதை நடைமுறைப்படுத்தலாம்‌.
    4. தண்டோரா போடும்‌ பணியில்‌ ஏதேனும்‌ பணியாளர்கள்‌ ஈடுபடுத்தப்பட்டிருந்தால்‌, அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள்‌ செய்து கொடுப்பதை ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை உறுதி செய்யுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.
    5. மேற்படி தண்டோரா போடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை மீநி ஈடுபடுத்துபவர்கள்‌ மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும்‌, இதனை ஊராட்சி அமைப்புகள்‌ வரை ஊடுருவும்‌ அளவுக்கு பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்கள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

    இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, தலைமை செயலாளர் இறையன்பு  மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்ததாவது:

    அறிவியல் வளர்ந்துவிட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் ‘தண்டோரா’ போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை. ஒலிப்பெருக்கியை வாகனங்களில் பொருத்தி வலம்வரச் செய்வதன் மூலம் மூலை முடுக்குகளிலெல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட இயலும். 

    எனவே, ‘தண்டோரா’ போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்’ என மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....