புது தில்லி: கடந்த சில தினங்களாக இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாகவே குறைந்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைத்து வெறும் 625 பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்றைய முன்தின பாதிப்பு 1,132 ஆக இருந்த நிலையில், நேற்று சற்று குறைந்து 937 ஆக பதிவானது.இந்நிலையில் இன்றைய பாதிப்பானது நேற்றைய பாதிப்பை விட இன்னும் குறைத்து வெறும் 625 ஆக பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (நவம்பர் 08) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 625 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட குறைவாகும்.
இதையும் படிங்க: நாய்கள் நன்றியுள்ளது மட்டுமல்ல அன்பும் மிகுந்தது..! அது பற்றி நாம் அறியாத ஆச்சரிய தகவல்கள்..!
இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,46,62,141 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 14,021 ஆக உள்ளது.
இந்தியாவில் கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்க்கு பிறகு முதல் முறையாக 24 மணி நேரத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,509 ஆகவே உள்ளது.
இன்று கொரோனா தோற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,119 -ஆக உள்ள நிலையில், தற்போது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,41,17,611 ஆக அதிகரித்துள்ளது .
தேசிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இன்று ஒரு நாளில் மட்டும் அதாவது கடந்த 24 மணி நேரத்தில் 1,43,638 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 219.74 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.