தஞ்சாவூரில் அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன.
தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழைக் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் வேரோடு விளைநிலங்களில் சாய்ந்து உள்ளது.
குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் அன்னப்பன்பேட்டை, திட்டை, மெலட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் ஒரிரு நாள்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் மழை நீரில் சேதமடைந்து விளை நிலத்தில் சாய்ந்து உள்ளது.
இச்சம்பவத்தால் ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மழை தொடர்ந்தால் நெல்மணிகளை காப்பாற்ற முடியாமல் அழுகிவிடும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மழைவிட்டு அறுவடை செய்தாலும் பாதி நெல்மணிகள் இயந்திரத்தில் அடிபட்டு பாதிக்கப்படும் என்பதால் பாதிக்கு பாதி இழப்பு ஏற்படும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரவாயல் – எண்ணூர்: இரண்டு அடுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஒப்புதல்!