தெலுங்கானாவில் நாய்கள் தொடர்ச்சியாக கடித்ததில் 5 வயதுமிக்க சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவன் பிரதீப். இவர் தந்தை காவலாளியாக வேலை பார்க்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதீப் தனது தந்தை வேலைப்பார்க்கும் பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது, பிரதீப்பை 3 நாய்கள் கூட்டுச் சேர்ந்து கடித்ததில் சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்வதற்குள் உயிரிழந்துள்ளான். இது குறித்த சிசிடிவி காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சிசிடிவி காட்சியின்படி, தொடக்கத்தில் பிரதீப் தனியாக நடந்து செல்கின்றான். அப்போது திடீரென 3 தெருநாய்கள் சிறுவனைச் சுற்றி சூழ்ந்து கொள்கின்றன. இதனால் பிரதீப் பதற்றமடைய, நாய்களிடம் இருந்து தப்பிக்க ஓடுகிறான்.
இருப்பினும், நாய்கள் பிரதீப்பை கீழே தள்ளி அவனைச் சூழ ஆரம்பிக்கின்றன. பின் கடிக்கத் தொடங்குகின்றன. ஒவ்வொரு முறையும் நாய்களிடமிருந்து தப்பிக்க முயன்று சிறுவன் எழுந்த போது எல்லாம் நாய்கள் அவனைத் தாக்கி கீழே தள்ளி கடிக்கின்றன. மேலும், அப்பகுதியில் பிரதீப்பை காப்பாற்றவும் யாரும் இல்லை.
5 साल के मासूम को #Hyderabad के आवारा कुत्तों ने नोच नोच कर जान लेली, बहुत ही दयनीय #hyderbad #streetdogs #Cruel #terifying #ATTACK #TurkeyEarthquake #indiatrending #TrendingNow #earthquake pic.twitter.com/k0KuCUtfSC
— Anand Singh (@anands0089) February 21, 2023
நாய்கள் தொடர்ந்து கடித்ததில் படுகாயமடைந்த பிரதீப்பை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே பிரிதீப் உயிழந்துள்ளான். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக தாய்மொழி தினம்: வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள்!