புது தில்லி: கடந்த சில தினங்களாக இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு கடந்த 2 தினங்களாக சற்று அதிகரித்து வருகிறது . கடந்த 24 மணி நேரத்தில் 2,208 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்றைய தொற்று பாதிப்பு 1,112 ஆக இருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்து 2,208 ஆக பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (அக்டோபர் 28) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 2,208 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட சற்று அதிகமாகும் .
இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,46,49,088 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தற்போது 19,398 ஆக உள்ளது.
இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்ததை அடுத்து , இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,999 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,619 – ஆக உள்ள நிலையில் , தற்போது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,41,00,691 ஆக அதிகரித்துள்ளது .
நேற்று ஒரு நாளில் மட்டும் 1,60,714 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது .இதனால், நாடு முழுவதும் இதுவரை 2,19,60,45,500 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை பதம் பார்த்த காலாண்டு முடிவு! அதிர்ச்சியில் ஊழியர்கள்