திருநெல்வேலியில் மர்ம காய்ச்சலால் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஃப்ளு காய்ச்சல் எனப்படும் எச்1 என்1 இன்ஃப்ளுயன்ஸா வைரஸ் காய்ச்சல் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக இந்தக் காய்ச்சல் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.
இதனிடையே, நெல்லை மாவட்டம், பத்தமடை பகுதியில், மர்ம காய்ச்சலால் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பத்தமடை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான இசக்கிமுத்துவின் மகள் பிரதிக்சா(வயது 2). இந்தக் குழந்தைக்கு கடந்த நான்கு நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் குறையாத காரணத்தால் பெற்றோர்கள் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதைத்தொடர்ந்து, குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 2 வயதான பிரதிக்சா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மர்மமான முறையில் சிறுமி உயிரிழந்த காரணத்தால், இதுகுறித்து பத்தமடை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இயற்கையை நம்மால் உருவாக்க முடியாது, ஆனால் இயற்கையை நம்மால் காக்க முடியும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்