தஞ்சை பெரிய கோயிலில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
உலகப் புகழ்ப்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை, ட்ரோன் கேமராக்கள் மூலம் படம்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று தஞ்சை பெரிய கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது, ட்ரோன் கேமரா ஒன்று பெரிய கோயிலின் கோபுரம் உள்ளிட்ட பகுதிகளை படம் பிடித்தவாறு வானில் வட்டம் அடைத்தது.
அந்த ட்ரோன் கேமராவை கல்லணை கால்வாயிலிருந்து இரண்டு நபர்கள் பறக்க விட்டது காவல்துறைக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த இரண்டு நபர்களையும் காவல்துறையினர் கைது செய்ததோடு ட்ரோன் கேமராவையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் அந்த இரண்டு நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு.. அரங்கநாதர் திருக்கோவிலில் தீப ஆராதனை