காங்கோ நாட்டில் ஏற்பட்ட வன்முறையில் இந்திய ராணுவத்தினர் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் கிளர்ச்சிப் படைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் வன்முறைகளும், அரசுக்கு எதிரான போராட்டங்களும் அதிகரித்து வருகிறது.
காங்கோவில் நடைபெற்று வரும் வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் ஐ.நா கடந்த 10 ஆண்டுகளாக அங்கு அமைதிப்படையை நிறுத்தி வருகிறது. இந்த அமைதிப்படையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ராணுவத்தினர் இருக்கிறார்கள்.
இருப்பினும், அமைதிப்படையினர் வன்முறையாளர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என அந்நாட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 27) அந்நாட்டின் வடக்கு கீவ் மாகாணத்தின் கோமா, பேனி நகரங்களில் உள்ள ஐ.நா அமைதிப்படை முகாம்கள் மீது பொதுமக்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கினர்.
இதில், இந்திய எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஷிஷுபால் சிங் மற்றும் சன்வாலா ராம் விஷ்னோய் ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். மேலும் அப்படையில் இருந்த 15 பேர் உயிரிழந்ததோடு 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதன் பிறகு காங்கோ ராணுவத்தினரால் போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அமைதிப்படை மீதான இந்த தாக்குதலுக்கு ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மியான்மரில் 5 பேருக்கு மரண தண்டனை- மரணம் எப்படி தண்டனையாகும்?