புதுச்சேரியில் காவல்துறையில் அதிகாரிகள் உள்பட 148 போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி காவல்துறையில் காவல் கண்காணிப்பாளர்கள்,, ஆய்வாளர்கள் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் மீண்டும் காவல்துறையில் உதவி ஆய்வாளர்கள் 11 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், காவல் உதவி ஆய்வாளர்களான வீரபுத்திரன் பெரியகடை காவல் நிலையம், மோகன் (காரைக்கால் டவுன் போக்குவரத்து), ஜாகீர் உசேன் ஒதியஞ்சாலை காவல் நிலையத்திறகும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் கோவிந்தன் – கோரிமேடு காவல் நிலையத்மிற்கும், முருகன் மற்றும் பாலா ஆகியோர் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்திற்கும், முகமது ஷேக் அலாவுதீன் புதுவை கிழக்கு போக்குவரத்து காவல்நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். காரைக்காலில் பெருமாள் நிரவி காவல்நிலையத்திற்கும், துரைராஜு சிறப்பு பிரிவிற்க்கும், வெங்கடேச பெருமாள் சட்டசபைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல் துணை உதவி ஆய்வாளர்கள், ஏட்டுகள், போலீசார் என 137 பேர் பல்வேறு காவல்நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை காவல்துறை தலைமையக போலீஸ் சூப்பிரண்டு சுபம்கோஷ் பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரியில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும்; இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்