ஆந்திராவில் வருங்கால மாப்பிள்ளைக்கு 125 உணவு வகைகளுடன் விருந்து வைத்து அசத்தியுள்ளார் ஒரு மாமியார்.
ஆந்திர மாநிலம், விஜயநகர மாவட்டம் எஸ்.கோட்டா பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணா-சுப்புலட்சுமி தம்பதியினர். இவர்களின் ஒரே மகன் சைதன்யா. சைதன்யாவுக்கும் விசாகபட்டினத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாச ராவ்- தனலட்சுமி தம்பதியரின் மகளான நிஹாரிகாவுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தசரா பண்டிகைக்கு வருமாறு வருங்கால மாப்பிள்ளையை பெண் வீட்டார் அழைத்துள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்த மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டுக்கு வந்தனர்.
இதையும் படிங்க:ஆஸ்கருக்கு விண்ணப்பித்துள்ள ஆர்ஆர்ஆர்….வெற்றி வாகை சூடுமா?
அப்போது மாப்பிள்ளை சைதன்யாவுக்கு 125 பலகாரங்கள் மற்றும் உணவு வகைகளை பரிமாறி அசத்தியுள்ளார் மாமியார். மாப்பிள்ளை அவற்றை சாப்பிட முடியாமல் பாதியிலேயே எழுந்து சென்றுள்ளார்.
இதில் குறிப்பு என்னவென்றால் அந்த மாப்பிள்ளைக்கு தான் சாப்பிட்ட பல உணவுகளின் பெயர் கூட தெரியாது என்பது தான். ஆனால் ருசியாக இருக்கிறது என வருங்கால மாமியாரின் கைப்பக்குவத்தை வெகுவாக மாப்பிள்ளை பாராட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் கேட்க இனித்தாலும், அதிகம் சாப்பிட்டால் திகட்ட தானே செய்யும்…