மதுரவாயலில் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலைபார்த்துகொண்டே கஞ்சா டெலிவரி செய்துவந்த நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் ராஜிவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம். இவருக்கு வயது 25. தமிழ்ச்செல்வம் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே சமயம், உணவு டெலிவரி செய்வதோடு கஞ்சா போன்ற போதைப்பொருள்களையும் விற்பனை செய்து வந்தார்.
இதனிடையே, மதுரவாயல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இது போன்ற போதைப்பொருள் விற்கப்படுவதாக மதுரவாயல் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் ரகசியமாக அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், ஆலப்பாக்கம் பகுதியில் தனியார் உணவு டெலிவரி செய்யும் உடையுடன் வந்த தமிழ்ச்செல்வத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது டெலிவரி செய்யும் பையில் இருந்த கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றினர்.
இதையடுத்து, தமிழ்ச்செல்வம் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெகு விமர்சையாக நடைபெற்ற தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் தெப்பத் தேரோட்டம்