இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஏறத்தாழ 11 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.
யுவன் சங்கர் ராஜாவை ஒரு தலைமுறைக்கான இசை மருந்து என்றே நாம் சொல்லலாம். அவரின் பாடல்கள் ஆறுதல்களாகவும் உற்சாகமூட்டுபவையாகவும் பலருக்கு இருக்கின்றன. இசையமைப்பாளர்களுக்கு ரசிகர்கள் இருந்தாலும், நடிகர்களுக்கு இருக்கும் அளவுக்கு தீவிரத்தன்மையுடன் இயங்கும் ரசிகர்கள் இருக்கிறார்களா என்றால் அது கேள்விக்குறிதான்.
இந்த கேள்வியைத் தாண்டி சில இசையமைப்பாளர்களுக்கு மட்டுமே தீவிரத்தன்மையுடன் இயங்கும் ரசிகர்கள் உள்ளனர். இப்படியான இசையமைப்பாளர்களுள் யுவன் சங்கர் ராஜாவும் ஒருவர்.
இவரின் பாடல்கள் புதியதாய் வெளிவருகிறது என்றாலே, இவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிடுவர். இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தப் போவதாக அறிவத்தது அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்ட மனநிலையை உருவாக்கியுள்ளது.
யுவன் சென்னையில் நடத்தும் இந்த கச்சேரிக்கு ‘யு & ஐ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 10-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிக்கு அரைஸ் என்டர்டெயின்மென்ட் ஏற்பாடு செய்து வருகிறது. ஏறத்தாழ 11 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார், யுவன் சங்கர் ராஜா.
இதனால், யுவன் ரசிகர்களால் செப்டம்பர் 10-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் திருவிழா நடைபெற இருப்பது உறுதி.
நம்பிக்கையையும், அம்மாவின் நினைவுகளையும் ஒருசேரத் தூண்டும் யுவனின் பாடல்!