Monday, March 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு'அந்த நாளை மறுக்கமுடியாது' - நெகிழ்ந்த விராட்கோலி

    ‘அந்த நாளை மறுக்கமுடியாது’ – நெகிழ்ந்த விராட்கோலி

    பாகிஸ்தானுக்கு எதிராக தான் ஆடியது குறித்து விராட் கோலி ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

    உலகக் கோப்பை தொடரில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குக்கும் இடையே கடந்த  அக்டோபர் 23-ஆம் தேதி நடைபெற்ற ஆட்டமானது கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது என்றே கூற வேண்டும். வெறுமனே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆலுடன் கண்டுகளித்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் விராட் கோலி 82 ரன்கள் எடுத்து அசத்தினார். 19-வது ஓவரில் விராட் கோலி அடித்த சிக்சர், ரசிகர்களை மட்டுமல்லாது ஜாம்பவான்களையும் வியக்க வைத்தது. இந்நிலையில், தற்போது விராட் கோலி அந்த ஆட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

    அதன்படி, ‘என் இதயத்தில் ‘2022 அக்டோபர் 23 ’ தினத்திற்கு எப்போதும் சிறப்பிடமுண்டு. ஒரு ஆட்டத்தில் இந்தளவுக்கான உற்சாகத்தை இதற்கு முன்பு நான் எப்போதும் கண்டதில்லை. அது ஓர் ஆசிர்வதிக்கப்பட்ட மாலை’ என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். 

    ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட பதிவு; வைரலான வீடியோ..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....