‘இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்’ என இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 9.30 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருக்கும் தர்பார் அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
இந்த விழாவில் அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பேரவை கட்சித் தலைவர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மற்றும் முதல்வர் குடும்பத்தினர் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, வாரிசு அரசியல் என்று விமர்சிப்பது எனக்கு புதிது இல்லை என்றும், எனது செயல்களின் மூலம் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பேன் என்றும் தெரிவித்தார்.
விளையாட்டின் தலைநகரமாக தமிழகத்தை மாற்றுவேன். அனைத்து தொகுதிகளிலும் ஒரு மைதானம் என்ற வாக்குறுதியை நிரைவேற்றும் பணியை முதலில் செய்வேன் என்றும் உதயநிதி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், இனி திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என்றும் நடிகர் கமல்ஹாசன் தயாரில் நடிக்க இருந்த திரைப்படத்திலிருந்து விலகுவதாகவும் இயக்குனர் மாறி செல்வராஜின் மாமனிதன் திரைப்படமே தனது கடைசி படம் என்றும் கூறினார்.
விஜய்யின் வாரிசு திரைப்படத்தை முந்துகிறதா அஜித்தின் துணிவு? – வெளிவந்த ரிப்போர்ட்..