ஈஷா யோகா மையத்திற்கு சென்று காணாமல் போன திருப்பூரை சேர்ந்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோவையில் ஜக்கி வாசுதவே் நடத்தி வரும் ஈஷா யோகா மையத்திற்கு பொதுவாகவே மக்கள் செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி 34 வயதான சுபஶ்ரீ ஒரு வார யோகா பயிற்சியில் கலந்துக் கொள்வதற்காக ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளார். அவரின் கணவர் பழனிகுமார்தான் யோகா மையத்தில் சுபஶ்ரீயை விட்டுச் சென்றுள்ளார்.
ஆனால், 18-ஆம் தேதி சுபஶ்ரீயை கூட்டிச்செல்ல பழனிகுமார் செல்ல, அங்கு சுபஶ்ரீயை காணவில்லை. இதைத்தொடர்ந்து. 19-ஆம் தேதி ‘கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காகச் சென்ற தனது மனைவி சுபஶ்ரீ காணவில்லை’ என அவரது கணவர் பழனிகுமார் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இப்புகாரை அடுத்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை, வெள்ளை நிற உடையில் சுபஶ்ரீ சாலையில் ஓடும் சிசிடிவி காட்சி ஒன்றை கண்டுள்ளது. இந்த காட்சி வெளியாகி இணையங்களில் வைரலானது.
இந்நிலையில், தற்போது சுபஶ்ரீ செம்மேடு காந்தி நகர் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை தற்போது சுபஶ்ரீ மரணம் தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.
சவுதி அரேபியாவுடன் கைகோர்த்த ரொனால்டோ; ஊதியம் ரூ.600 கோடியா?