கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார்.
கத்தாரில் உலகக் கோப்பை திருவிழா நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதனால் உலக நாடுகளின் கண்கள் தற்போது கத்தாரின் மீது அதிகம் விழுந்துள்ளது.
இந்நிலையில், சௌதி அரேபியா நிகழ்த்தியுள்ள ஒரு செயல் உலக கால்பந்து ரசிகர்களை வியப்படையச் செய்துள்ளது. அதன்படி, போர்ச்சுகல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார்.
ரொனால்டோ போட்டுள்ள ஓப்பந்தத்தின்படி, வரும் 2025-ஆம் ஆண்டுவரை அல்-நாசர் கால்பந்து கிளப்பில் ஆடவுள்ளார். மேலும், இதற்காக ரொனால்டோவுக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி ஊதியம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
முன்னதாக ரொனால்டோ மான்செஸ்டர் கிளப்பில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் வெளியேறினார். மேலும், தனது கால்பந்து உலகக் கோப்பை கனவை கத்தார் உலக கோப்பையில் அடைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்கனவு நிறைவேறாமல் போனது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு வண்டலூரில் குவியும் பொதுமக்கள்