Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசவுதி அரேபியாவுடன் கைகோர்த்த ரொனால்டோ; ஊதியம் ரூ.600 கோடியா?

    சவுதி அரேபியாவுடன் கைகோர்த்த ரொனால்டோ; ஊதியம் ரூ.600 கோடியா?

    கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார். 

    கத்தாரில் உலகக் கோப்பை திருவிழா நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதனால் உலக நாடுகளின் கண்கள் தற்போது கத்தாரின் மீது அதிகம் விழுந்துள்ளது. 

    இந்நிலையில், சௌதி அரேபியா நிகழ்த்தியுள்ள ஒரு செயல் உலக கால்பந்து ரசிகர்களை வியப்படையச் செய்துள்ளது. அதன்படி, போர்ச்சுகல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார். 

    ரொனால்டோ போட்டுள்ள ஓப்பந்தத்தின்படி, வரும் 2025-ஆம் ஆண்டுவரை அல்-நாசர் கால்பந்து கிளப்பில் ஆடவுள்ளார். மேலும், இதற்காக ரொனால்டோவுக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி ஊதியம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    முன்னதாக ரொனால்டோ மான்செஸ்டர் கிளப்பில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் வெளியேறினார். மேலும், தனது கால்பந்து உலகக் கோப்பை கனவை கத்தார் உலக கோப்பையில் அடைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்கனவு நிறைவேறாமல் போனது குறிப்பிடத்தக்கது. 

    புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு வண்டலூரில் குவியும் பொதுமக்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....