வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று ஒரே நாளில் சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்தனர்.
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதே சமயம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை வருவதால் சுற்றுலா தளங்களில் அதிக அளவு கூட்ட நெரிசல் காணப்படுகிறது.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.
இன்று வார விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறை காரணமாக வண்டலூரில் காலை முதலே குடும்பத்தினருடன் பொதுமக்கள் வருகை தந்தனர். மேலும் இன்று ஒரே நாளில் சுமார் 17 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்ததாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை விடுமுறை நாள் மற்றும் புத்தாண்டு என்பதால் மேலும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு