Sunday, March 24, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு'எனக்கு 123 வயதா?' - ஆதாரால் ஏற்பட்ட குழப்பம்... தொடர் அலைச்சலில் பெண்!

    ‘எனக்கு 123 வயதா?’ – ஆதாரால் ஏற்பட்ட குழப்பம்… தொடர் அலைச்சலில் பெண்!

    41 வயது பெண்ணை 123 வயது பெண் என ஆதார் அட்டையில் அச்சடிக்கப்பட்டதால் அதை திருத்தம் செய்ய முடியாமல் ஒரு பெண் தவித்து வருகிறார். 

    திருச்சி மாவட்டம், தாயனூர், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கவிதா. இவருக்கு வயது 41. இவர் கடந்த 1982 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இந்நிலையில், கவிதா ஆதார் எடுக்கும்பொழுது பிறந்த ஆண்டு 1982 என்பதற்கு பதிலாக 1900 என அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. அதாவது 41 வயது பெண்ணுக்கு 123 வயது என ஆதார் அட்டையில் அச்சிடப்பட்டுள்ளது. 

    இப்படி தவறுதலாக அச்சடிக்கப்பட்டதன் காரணமாக, அவர் அரசின் எந்த சலுகைகளையும் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் அரசின் திட்டங்களுக்கும் ஆதார் அட்டையை பயன்படுத்த முடியாமலும், வாகனம் மற்றும் லோன் தொடர்பான சேவைகளும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

    இதனால் கடந்த 4 ஆண்டுகளாக ஆதார் அட்டையில் இருக்கும் பிறந்த ஆண்டை மாற்றக்கோரி பலமுறை முயற்சி செய்துள்ளார். மேலும் பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ் இல்லையெனக் கூறி பிறந்த ஆண்டை மாற்றி தர, அரசு அதிகாரிகள் மறுப்பதாக கவிதா தெரிவித்துள்ளார். 

    தன்னிடம் வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே இருப்பதாகவும் ஆனால், அதை வைத்துக்கொண்டு பிறந்த ஆண்டை மாற்ற முடியாது என அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கவிதா கூறுகிறார். 

    இந்நிலையில், தனது ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டை மாற்றி தர வேண்டும் என கவிதா திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தார். 

    ஐபிஎல் தொடரில் பும்ரா இல்லையா? – வெளிவந்த தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....