ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களின் இறக்குமதியை ஒன்றிய அரசு தடை செய்யுமா? என்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் கேள்விக்கு தொழில்துறை இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களின் இறக்குமதியை இந்திய அரசு தடை செய்யுமா? என்று 09 டிசம்பர் 2022 அன்று வைகோ எம்.பி. அவர்கள் கேட்ட கேள்விக்கு, ஒன்றிய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி எண். 378
(அ) ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை இறக்குமதி செய்வதை உடனடியாக தடை செய்யுமாறு அமைச்சகத்தை வலியுறுத்தி தமிழக முதல்வரிடமிருந்து கடிதம் ஏதும் பெறப்பட்டதா?
(ஆ) அப்படியானால், அரசின் பதில் என்ன?
(இ) சீனா போன்ற நாடுகளில் இருந்து சட்டப்பூர்வமாக அல்லது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை இறக்குமதி செய்வதால், தீப்பெட்டித் தொழில் அதன் உள்நாட்டுச் சந்தையை இழக்கிறது என்பதை அரசு அறிந்திருக்கிறதா?
(ஈ) அப்படியானால், தமிழ்நாட்டின் தென்பகுதியில் வேலைவாய்ப்பைத் தரும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
என்று வைகோ அவர்கள் கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் அமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் பதில்:
(அ): ஆம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை இறக்குமதி செய்வதை உடனடியாகத் தடை செய்யக் கோரி தமிழக முதல்வரிடமிருந்து 08.09.2022 தேதியிட்ட கடிதம் வந்துள்ளது.
(ஆ) முதல் (ஈ): சிகரெட் லைட்டர்களுக்கான கட்டாய இந்திய தரநிலைகளை அறிவிப்பதற்காக, இந்திய தரநிலைகளின் அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையால் ஆராயப்பட்டது.
மேலும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை இறக்குமதி செய்யும் போது, சட்டவிரோத இறக்குமதி, குறைவான விலைப்பட்டியல் மற்றும் தவறான அறிவிப்பு ஆகியவற்றை சரிபார்க்க வருவாய்த் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உண்மையான விடுதலை இதுவரை நமக்கு கிடைக்கவில்லை! முதலமைச்சர் ரங்கசாமி ஆதங்கம்