Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஆஸ்கர் மேடையில் வைத்து தொகுப்பாளரை அறைந்தார் வில் ஸ்மித் : என்ன காரணத்திற்காக அடித்தார் தெரியுமா...

    ஆஸ்கர் மேடையில் வைத்து தொகுப்பாளரை அறைந்தார் வில் ஸ்மித் : என்ன காரணத்திற்காக அடித்தார் தெரியுமா ?

    ஆஸ்கர் விழாவின் மேடையில் வைத்து தன் மனைவியை கேலி செய்ததற்காக தொகுப்பாளரைப் பளாரென்று கன்னத்தில் அறைந்தார் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் வில் ஸ்மித். 

    2022ஆம் ஆண்டுக்கான 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்பொழுது, சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை அமெரிக்க நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் வழங்கிக் கொண்டிருந்தார். 

    அப்பொழுது விழாவிற்கு வந்திருந்த ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் வில் ஸ்மித் மற்றும் ஜடா ஸ்மித்தைப் பார்த்து நகைச்சுவையாகப் பேசத் தொடங்கினார். ஜடா ஸ்மித்தின் சிகையலங்காரம் பார்ப்பதற்கு ஜி ஜே ஜேன் என்ற திரைப்படத்தில் வரும் கதாநாயகியைப் போல இருப்பதாக நக்கல் செய்ய ஆரம்பித்தார். மேலும், அவர் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார் எனவும் நக்கல் செய்ய ஆரம்பித்தார். 

    இந்த நகைச்சுவையைச்  சிறிதும் ரசிக்காத ஜடா ஸ்மித் உடனடியாக தன்னுடைய முகபாவனைகள் மூலம் எதிர்ப்பை வெளிக்காட்டினார். ஆனால், சற்று கோபமடைந்த வில் ஸ்மித் மேடைக்கு ஏறி சென்று கிறிஸ் ராக்கின் கன்னத்தில் பளாரென்று ஓங்கி அறைந்தார். இதனை சிறிதும் எதிர்பார்க்காத கிறிஸ் ராக் பாருங்கள் வில் ஸ்மித் என்னை அடித்து விட்டார் என மேலும் நகைச்சுவையாக பேசத் தொடங்கினார். 

    இதனால் மேலும் ஆத்திரமடைந்த வில் ஸ்மித் கடுமையான வார்த்தைகளுடன் என் மனைவியைப் பற்றி எதுவும் பேசாதே என கிறிஸ் ராக்கைப் பார்த்து கடுமையாக கத்தத் தொடங்கி விட்டார். சட்டென நிகழ்ந்து முடிந்த இந்த சம்பவத்தால் ஆஸ்கார் மேடையே சற்று நேரம் அமைதியில் மூழ்கியது. இந்த நிகழ்வானது அமெரிக்காவில் உள்ள தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

    இதனைப் பார்த்து அதிர்ந்து போன பொதுமக்கள் இது உண்மையாகவே நடந்த நிகழ்வா? அல்லது ஏதேனும் நகைச்சுவைக்காக முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடந்த நிகழ்வா? என குழம்பிப் போய் உள்ளனர். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். 

    வில் ஸ்மித்தின் மனைவி ஜடா ஸ்மித் அலோபீசியா என்னும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தலைமுடியை இழந்து வருவதால் அவர் மொட்டைத்தலையுடன் காணப்படுகிறார். இந்நிலையில் கிறிஸ் ராக்கின் இந்த நகைச்சுவை வில் ஸ்மித் மற்றும் ஜடா ஸ்மித்தை கடுமையாக புண்படுத்தியதால் தான் இவ்வாறு நடந்ததாகக் கூறப்படுகிறது. 

    இந்நிலையில் ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர். சிறிது நேரம் கழித்து மேடையில் பேசிய வில் ஸ்மித் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார். இந்த வருடத்திற்கான சிறந்த நடிகர் விருதை வில் ஸ்மித் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....