தமிழகத்தில் காலியாக உள்ள 161 பணியிடங்களை நிரப்ப, குரூப் 5 ஏ தேர்வுக்கான அறிவிப்பு ஆணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல் செப்டம்பர் 21- ம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப் பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் குரூப் 5 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 26 முதல் 28-ம் தேதி வரை விண்ணப்ப திருத்தங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என்றும், தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 பணியிடங்களை நிரப்ப குரூப் 5 ஏ தேர்வுக்கு இன்று (ஆகஸ்ட் 23) முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் டிசம்பர் 18 எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also read : குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவு