Saturday, April 27, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புகுரூப் 5 ஏ தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் வெளியீடு - எப்போது விண்ணப்பிப்பது?

    குரூப் 5 ஏ தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் வெளியீடு – எப்போது விண்ணப்பிப்பது?

    தமிழகத்தில் காலியாக உள்ள 161 பணியிடங்களை நிரப்ப, குரூப் 5 ஏ தேர்வுக்கான அறிவிப்பு ஆணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.

    அதன்படி, இன்று முதல் செப்டம்பர் 21- ம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப் பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் குரூப் 5 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், செப்டம்பர் 26 முதல் 28-ம் தேதி வரை விண்ணப்ப திருத்தங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என்றும், தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 பணியிடங்களை நிரப்ப குரூப் 5 ஏ தேர்வுக்கு இன்று (ஆகஸ்ட் 23) முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தமிழகத்தில் டிசம்பர் 18 எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also read : குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....