மத்திய பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் குடித்துவிட்டு சாலையில் ரகளை செய்யும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம், குவாலியர் நகரில் இளம்பெண் ஒருவர் சாலையில் ரகளையில் ஈடுபட்டார். இந்தப் பெண் காதல் தோல்வி காரணமாக, அவ்வாறு குடித்துவிட்டு சாலையில் ஏதேதோ உளறி பேசியதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதுதான் உண்மையான காரணமா என்பது 100 சதவீதம் தெரியவில்லை.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அந்தப் பெண் சாலையில் அங்கும் இன்னும் சுற்றித் திரிகிறார். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் அவர் நடந்து கொள்கிறார். திடீரென கார் மீது ஏறுவதும், பைக்கை பிடுங்குவதும் என ஒரே அட்டகாசம் செய்கிறார். அவர் மது போதையில் இருப்பது போல காணப்படுகிறார்.
பிறகு, சிறிது நேரம் கழித்து அங்குள்ள பெண்கள் சிலர் அந்தப் பெண்ணுக்கு எடுத்துரைக்கின்றனர்.
இந்தக் காணொளியை பகிர்ந்த ட்விட்டர் பயனர், ‘காதல் தோல்வியில் பெண் செய்த கலாட்டா.. இது குவாலியரின் பூல் பாக் சந்திப்பில் நடத்த சம்பவம்’ என குறிப்பிட்டுள்ளார்.
लड़की को प्यार में मिला धोखा तो कर दिया बवाल, बीच सड़क पर घंटों मचाया उत्पात।
मामला ग्वालियर के फूल बाग चौराहे का बताया जा रहा है।#Viral #Trending #ViralVideo pic.twitter.com/yIts74BQMn— Vikash Kumar (@kmrvikash11) March 29, 2023
மாணவியை சாதிப்பெயரை சொல்லி திட்டிய பேராசியர் மதுரையில் கைது..