மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவியை சாதிப்பெயர் சொல்லித் திட்டிய விவகாரத்தில் பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரையில் காமராஜர் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இப்பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றுபவர் சண்முகராஜா.
இவர் வரலாற்றுத்துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவியை சாதிப்பெயரை வைத்தும், உருவத்தை வைத்தும் கிண்டல் கேலி செய்துள்ளார். இதனால் அந்த மாணவி பலத்த மனஉளைச்சலுக்கு உள்ளானார். இதையடுத்து, மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் உதவி பேராசிரியர் சண்முகராஜா மீது அந்த மாணவி புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, உதவி பேராசிரியர் சண்முகராஜா மாணவியைத் தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசியது உண்மை எனத் தெரியவந்தது.
இதையடுத்து நாகமலை புதுக்கோட்டை போலீஸார், சண்முகராஜா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே சண்முகராஜா மீது அடிக்கடி இப்படியான புகார்கள் எழுந்து வருவதாக அப்பல்கலைகழக்த்தில் பயின்ற மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பும்ராவுக்கு அணியில் இடம் உண்டா? இல்லையா? – குழப்பத்தில் ரசிகர்கள்!