Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதிரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் வீட்டில் குண்டுவெடிப்பு; 2 பேர் உயிரிழப்பு!

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் வீட்டில் குண்டுவெடிப்பு; 2 பேர் உயிரிழப்பு!

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் திட்டமிடப்பட்டிருந்த பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகிலேயே குண்டுவெடிப்பு ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்.

    மேற்கு வங்க மாநிலம், மெதினிபூரில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் திட்டமிடப்பட்டிருந்த பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகிலேயே குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். 

    காண்டாய் நகரில் இருந்து 1.5 கிலோ மீட்டர் அருகே உள்ள பூபதி நகர் என்ற பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜியின் பொதுக்கூட்டம் திட்டமிடப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், நேற்று இரவு 11.15 மணி அளவில் அங்குள்ள ஒரு வீட்டில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதையடுத்து இன்று காலை 2 நபர்களின் உடல்கள் சடலமாக மீட்க்கப்பட்டன. மேலும் சில பேர் காயமடைந்துள்ளனர். 

    இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. அதே சமயம் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மாதிரிகளைச் சேகரித்தனர். 

    இந்தச் சம்பவம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ், மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியை எந்த ஆதாரமும் இல்லாமல் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது மிக எளிதானது என தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....