பிரதமர் மோடியின் காரில் ஏற முயன்ற குஜராத் முதலமைச்சரை தேசிய பாதுகாப்பு படை வீரர் தடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆதலால், குஜராத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள பா.ஜ.க தற்போது தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
அந்த முயற்சியின் ஒரு வகையாக, பிரதமர் மோடி அடிக்கடி குஜராத் செல்வதை காணலாம். அங்கு பிரசாரம் செய்தல், புதிய திட்டங்களை துவக்கி வைத்தல் போன்றவற்றின் மூலம் குஜராத் மக்களை கவர முற்பட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக குஜராத் சென்றிருந்தார். அப்போது, மோடியின் காரில் ஏற முயன்ற அம்மாநில முதல் மந்திரி பூபேந்திர படேலை, மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் தடுத்தார். இந்நிகழ்வைச் சார்ந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதைத்தொடர்ந்து, ‘ஒரு பாஜக முதலமைச்சரே மோடி ஜியிடம் அவமானம் பெற வேண்டுமென்றால், சமானியர்களின் நிலையை கற்பனை செய்து பாருங்கள்’ என்று ஒய்எஸ்ஆர் ட்விட் செய்துள்ளார்.
Look at what an elected CM has to face. If a BJP CM has to undergo this treatment from Modi ji, then imagine the plight of common man! 👇 pic.twitter.com/tDLSeZTiJE
— YSR (@ysathishreddy) October 24, 2022
இதையும் படிங்க: தொடரும் பதற்றம்! கோவை கார் வெடிவிபத்தில் புதிதாக மேலும் ஒருவரை கைது செய்தது தனிப்படை