இந்தியாவின் மல்யுத்த சம்மேளனத்திற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். இவர் நேற்று பெண் மல்யுத்த வீராங்கனைகள் பயிற்சியாளர்களால் பல ஆண்டுகளாகப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாக கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
வினேஷ் போகத்துடன் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா போன்றவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் பங்குபெற்ற வீரர்கள் இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளிப்பதாகவும், துன்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டை தொடர்ந்து 72 மணிநேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் இந்திய மல்யுத்த சம்மேளத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மல்யுத்த வீரர்களின் இந்த குற்றச்சாட்டை இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த இரட்டை சதம்.. வீணான நியூசிலாந்தின் போராட்டம்