Wednesday, March 20, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'கேப்டனுக்கு பாராட்டு விழா' - நடிகர் விஷால் பேச்சு..

    ‘கேப்டனுக்கு பாராட்டு விழா’ – நடிகர் விஷால் பேச்சு..

    நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் நிறைவடைந்தவுடன் முதல் விழாவாக, கேப்டனுக்கான பாராட்டு விழா அங்கே நடத்தப்படும் என விஷால் தெரிவித்துள்ளார். 

    ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிப்பெற்ற ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். 

    இதைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய பஹிரா படம் சமீபத்தில் திரைக்கு வெளிவந்துள்ளது. இந்நிலையில், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் மார்க் ஆண்டனி படத்தில் விஷால் நடித்து வருகிறார்.

    இப்படத்தின் மோஷன் வெளியீட்டு விழா மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று மகளிர் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. அப்போது நடிகர் விஷால் தெரிவித்தாவது, ‘’அதிர்ஷ்டவசமாக ’மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பு தளத்தில் உயிர் தப்பினேன். அனைவருமே கவனமாகத்தான் இருந்தோம். ஆனாலும் விபத்து நடந்துவிட்டது. நடிகர் சங்கம் கட்டிடத்தை பொறுத்தவரை இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பணிகள் நிறைவடையும்.

    நடிகர் சங்க கட்டிடத்தைப் பொறுத்தவரை அதற்கான பத்திரத்தை மீட்டுக் கொடுத்தவர் கேப்டன் தான். அதனால் கட்டிடப் பணிகள் நிறைவடைந்தவுடன் முதல் விழாவாக, கேப்டனுக்கான பாராட்டு விழா அங்கே நடத்தப்படும்’’ என்றார்.

    இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் போட்டி; சென்னையில் டிக்கெட் விற்பனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....